in

‘அன்புமணியை நம்ப யாரும் தயாராக இல்லை!’ – ஜி.கே.மணி மற்றும் எம்.எல்.ஏ அருள் அதிரடி |“No One Is Ready to Trust Anbumani!” – G.K. Mani and MLA Arul’s Blunt Attack


தமிழ்நாட்டில் வலிமையான மற்றும் தவிர்க்க முடியாத கட்சியாகவும் இருந்த பாமகவை திட்டமிட்டு, சூழ்ச்சியால், அபகரிப்பதற்கும் பிளவுபடுத்துவதற்கும் அன்புமணி மேற்கொண்ட நடவடிக்கையால், ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் அடைந்தார்.

அன்புமணியின் தூண்டுதலால், சிலர் ராமதாஸின் மனம் புண்படும்படியாகப் பேசினர்.

தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரமில்லாத கட்சியாக மாறிவிட்டது.

ஜி.கே.மணி (File Photo)

ஜி.கே.மணி (File Photo)

இந்த நிலையில்தான், மீண்டும் அங்கீகாரமுள்ள கட்சியாக வளர்த்தெடுப்பேன் என்று புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்திருக்கிறார்.

இதன் அடிப்படையில்தான், ராமதாஸ் பின்னே வலிமையான கட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

அன்புமணி பின்னால் விவரம் அறியாமல் சென்ற நிர்வாகிகள் மீண்டும் திரும்பி வருவார்கள். ராமதாஸ் தலைமையில் பாமக அமைக்கும் கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். பாமகவுக்கு அன்புமணி வர வேண்டுமென அனைவரும் விரும்பினோம். சூழ்ச்சியால் பிரிந்து சென்றனர்” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய பாமக எம்.எல். ஏ அருள், ” ராமதாஸுடன் கூட்டணிக்காக

3 கட்சிகள் அழைப்பு விடுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 3 கூட்டணிகளுமே அன்புமணியை நம்பத் தயாராக இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அன்புமணி குறித்து ராமதாஸ் என்ன கூறுகிறார்?|“This Is My Last Battle”: Ramadoss Takes On Son Anbumani

DMDK: திமுக, அதிமுக, தவெக… யாருடன் கூட்டணி? தேமுதிகவின் திட்டம் தான் என்ன?