சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என இறுதி வாதத்தில் சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
ஜெயராஜ் மனைவி நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். இதையடுத்து 9 பேருக்கான தண்டனை ஏப்ரல் 6-ல் அறிவிக்கப்படும் என நீதிபதி ஒத்திவைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.


GIPHY App Key not set. Please check settings