இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சச்சின், இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், விராட் மற்றும் ரோஹித்திற்கு ஸ்பெஷலாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் ரோஹித் பற்றி கூறியுள்ள சச்சின், “நம்பிக்கைக்குரிய இளைஞராக இருந்து உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக அனைவரது மனங்களையும் வென்ற உனது இந்தப் பயணத்தை நான் அருகில் இருந்து பார்த்தவன். உனது இந்த அர்ப்பணிப்பும், திறமையும் தேசத்திற்கு மகத்தான பெருமையைச் சேர்த்திருக்கிறது. டி20 உலகக் கோப்பையை வென்றது உனது இந்தக் கிரிக்கெட் பயணத்தின் உச்சம் ரோஹித்” என்ற பதிவிட்டுள்ளார்.
விராட் பற்றி, “விராட் நீதான் உண்மையான சாம்பியன். இத்தொடரின் ஆரம்பத்தில் உனது ஆட்டம் கொஞ்சம் கடினமாக அமைந்திருக்கலாம். ஆனால், நேற்று இரவு உண்மையான சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை நீ நிரூபித்துவிட்டாய். ஆறு உலகக் கோப்பைகளில் பங்கேற்று இப்போது வெற்றி பெற்றது எனக்கு நன்றாகத் தெரிந்த அனுபவம். இந்தியாவிற்காக இன்னும் விளையாடி பெருமை சேர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்”என்று பதிவிட்டுள்ளார்.



GIPHY App Key not set. Please check settings