[ad_1]
நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைக் குட்டியை புலி வேட்டையாடிய நிலையில், தாய் யானை நடத்திய பாசப் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து கர்நாடாக மாநிலம மைசூர் செல்லக்கூடிய சாலை முதுமலை வனப்பகுதிகள் மற்றும் மைசூர் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியாக உள்ளன. இங்கு, யானை, புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்துடன் அவ்வப்போது வன விலங்குகள் சாலையை ஆக்கிரமிப்பதால் வாகன ஓட்டுகள் அச்சத்துடனே அப்பகுதியை கடந்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் படுகாயங்களுடன் யானை குட்டி ஒன்று இறந்து கிடந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் படு காயங்களுடன் இருந்த யானை குட்டிக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். ஆனால், தாய் யானை யாரையும் அதன் அருகே விடாமல் ஆக்ரோஷத்துடன் துரத்தியது. மேலும், தொடர்ந்து இறந்து கிடந்த குட்டியை விட்டுச் செல்ல மனம் இல்லாமல் தாய் யானை பாசப் போராட்டம் நடத்தியது.
மைசூரில் இருந்து நீலகிரி நோக்கி வந்த வாகனங்களும் அதே போல் நீலகிரியில் இருந்து மைசூர் சென்ற வாகனங்களும் சோதனைச் சாவடியிலேயே நிறுத்தப்பட்டன. கனரக மற்றும் பேருந்துகள் யானையை கடந்து செல்லும் பொழுது அந்த வாகனங்களை தாக்க தாய் யானை முயற்சித்தது. இதையடுத்து தாய் யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினார். பின்பு கிரேன் உதவியுடன் இறந்த யானை குட்டியை அப்புறப்படுத்தினர்
தொடர்ந்து 3 மணி நேரமாக சாலையிலேயே காத்திருந்த பொதுமக்கள் குட்டி யானையின் உடல் அகற்றப்பட்ட பின்னர் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பந்திப்பூர் சாலையில் தனது குட்டி இறந்ததால் தாய் யானை நடத்திய பாசப்போராட்டம் காண்போரை கண் கலங்கச் செய்தது .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
[ad_2]
Source link