இந்த ஆண்டு அட்சய திருதியை தங்கம் விற்பனை 30 சதவீதம் வரை சரிந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவது பொதுமக்களின் வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை இரண்டு நாட்கள் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகைக்கடைகள் காலை 8 மணிக்கே திறக்கப்பட்டன. சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் தங்கம் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.



GIPHY App Key not set. Please check settings