“ஒருசில நபர்களின் சதிவேலையால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின்வெட்டு குறித்த புகார்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களும் ஒத்துழைக்க வேண்டும். எங்கெல்லாம் மின்வெட்டு உள்ளது, அதனை எவ்வளவு நேரத்தில் சரிசெய்கிறோம் என்பதை மின் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம்.” என மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
அகில இந்திய அளவிலான சிஐஐ கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், “சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இந்தத் துறையில் அரசு எடுக்கப்போகும் கொள்கை முடிவுகள் மற்றும் அரசின் ஒத்துழைப்பு குறித்து விளக்கமளித்தோம்.



GIPHY App Key not set. Please check settings