in

60,000 பேர் எல்லை தாண்டல், பல உயிரிழப்புகள்… சியூட்டாவில் இப்போது என்ன நிலை? | Ceuta Migrant Crisis 2026: 67 Dead, 60,000 Cross Spain-Morocco Border — Latest Updates


மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் சுமார் 60,000 பேர் நுழைந்த சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல உயிரிழப்புகளுக்கும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிக்கும் காரணமான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியின் நிலவரம் குறித்த விவரங்கள்.

60,000 பேருக்குப் பிறகு சியூட்டாவில் என்ன நடந்தது?

எல்லையைக் கடந்த சுமார் 60,000 பேரில் 45,000 முதல் 48,300 பேர் வரை தாங்களாகவே மொராக்கோவுக்குத் திரும்பியதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள்

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள்
Antonio Sempere

சியூட்டாவுக்குள் நுழைந்தவுடன் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்குச் சென்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன் பலர் வந்திருந்தனர். ஆனால், சியூட்டாவின் புவியியல் அமைப்பும் கடுமையான சட்ட நடைமுறைகளும் அவர்களுக்கு வேறு ஒரு யதார்த்தத்தை உருவாக்கின.

சியூட்டா என்பது ஸ்பெயினின்

கட்டுப்பாட்டில் உள்ள வட ஆப்பிரிக்கப் பகுதியாகும்; இது ஐரோப்பிய நிலப்பரப்புடன் நேரடியாக இணைக்கப்பட்டதல்ல. அங்கிருந்து ஸ்பெயின் பிரதான நிலப்பரப்புக்குச் செல்ல கப்பல் அல்லது விமானப் பயணம் அவசியப்படுவதால், அதற்கான அடையாளச் சோதனைகள் மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையைக் கடந்த பலரால் உடனடியாக அடுத்த கட்டமாக ஐரோப்பாவுக்குள் செல்ல இயலவில்லை.

அதேநேரத்தில், குடியேற்ற வரவேற்பு மையங்கள் மிக விரைவாக நிரம்பியதால், உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த அவல நிலையே பலர் தாங்களாகவே மொராக்கோவுக்குத் திரும்பியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

இறந்தவர்களை மீட்கும் பணி

இறந்தவர்களை மீட்கும் பணி
Antonio Sempere

பல உயிரிழப்புகள் எப்படி ஏற்பட்டன?

இந்தப் பெருமளவிலான மக்கள் கடல் வழியாக நுழைந்தபோது பலர் நீந்தியே சியூட்டாவை அடைய முயன்றனர். ஆபத்தான கடல் நீரோட்டம், கூட்ட நெரிசல் மற்றும் கடற்கரைத் தடுப்புப் பகுதிகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக 41 முதல் 67 பேர் வரை உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

“என் பதவி பறிக்கப்பட்ட காரணத்தை திமுக தலைமை சொல்லட்டும்” – தோப்பு வெங்கடாசலம் | Thoppu Venkatachalam says DMK leadership state reason why I was stripped of my post

மதுரை மீனாட்சியம்மன் கோவில்: “அபிஷேக தீர்த்த கிணறு அருகிலேயே குப்பைகள் தேங்கம்” – அண்ணாமலை புகார் | Madurai Meenakshi Amman Temple: “Garbage piling up next to Abhisheka Theertha well” – Annamalai complains.